பதிவுலகத் தோழர்களுக்கு வணக்கம்.பதிவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய மீண்டும் பதிவர்கள் சந்தித்து மகிழக்கூடிய ஒரு செய்தியோடு உங்களைச் சந்திப்பதில் மனமகிழ்கிறேன்.
கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் ஒரு பிரம்மாண்ட பதிவர் சந்திப்பை நடத்தி முடிந்திருந்தோம் அல்லவா.அதன் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தது தொழிற்களம் என்பதை நாம் அறிவோம்.
தொழிற்களம் நிறுவனம் பதிவர்களை சிறப்பான முறையிலே ஊக்குவித்து பலருக்கும் பயன்படும் பதிவுகளை பதிவர்களை எழுத வைத்துக்கொண்டிருப்பதையும் அறிவோம். கடந்த காலங்களில் எந்த ஒரு நிறுவனமும் பதிவர்களை இப்படி ஊக்குவித்ததா எனத் தெரியவில்லை என்பதைவிட இல்லையென்று சொல்லலாம்.பதிவர்களுக்காகவே மக்கள் சந்தை.காம் தொழிற்களம் என்றதொரு வலையை உருவாக்கி இருக்கிறார்கள்.அதில் பல பதிவர்கள் பல செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அவ்வப்போது பதிவர்களைப் பாராட்டி பரிசளித்து அவர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு பல விழாக்களை நடத்தி வருகிறார்கள்.அந்த அருமையான செயலுக்கு பதிவர்கள் கட்டாயம் தங்களது பாராட்டுதல்களை தொழிற்களத்திற்கு தெரிக்க வேண்டும்.
தொழிற்களம் இப்போது 'உறவோடு உறவாடுவோம்' என்ற தலைப்பில் டிசம்பர் 30 ம் நாள் மாபெரும் விழாவை நடத்த உள்ளது அவ்விழாவிற்கு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் தலைமை தாங்குகிறார்.
இந்த விழாவில் தமிழ் வலைப்பதிவர்கள் சங்கமமும் நடைபெறுகிறது.பதிவர்கள் ஒன்று கூடும் கருத்தரங்கமும் நடக்கவிருக்கிறது.ஏற்கனவே பதிவுலகத்திற்கு தொழிற்களத்தின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.இருப்பினும் இறுதியழைப்பை பதிர்வர்களுக்கு கொடுக்கவும் தொழிற்களம் விரும்புகிறது.விரைவில் அழைப்பு உங்களுக்கு வந்து சேரும்.
இவ்விழாவில் கலந்துகொள்ளும் பதிவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்து கொண்டால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வசதியாயிருக்கும்.வருகையை உறுதி செய்த பதிவர்களுக்கு முன்னதாக இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும்.எனவே டிச 30 விழாவில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துகொள்ளுங்கள்.இதுவரை 30 பதிவர்கள் வருகையை உறுதி படுத்தியுள்ளனர்.திங்கட் கிழமை தங்கள் வருகையை உறுதி செய்த பதிவர்களின் பட்டியல் வெளியிடப்படும்..
நன்றி!
அன்புடன் மதுமதி
வரவேற்புக்குழு:
சீனு
கண்மணி
என் ராஜபாட்டை ராஜா
செழியன்
கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் மக்கள் சந்தை.காம் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்கள் உரையாடிய காணொளி
கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் மக்கள் சந்தை.காம் நிர்வாக இயக்குனர் தோழர் அருண் அவர்கள் உரையாடிய காணொளி
.
உறவோடு உறவாடுவோம் விழா குறித்த மேலான தகவல்களைக் காண இங்கே செல்லுங்கள்.