Showing posts with label உறவோடு உறவாடுவோ. Show all posts
Showing posts with label உறவோடு உறவாடுவோ. Show all posts

Thursday, December 27, 2012

வலைச்சரம் சீனா அய்யாவுக்கு நன்றி!!

          டிசம்பர் விழாவிற்கும் பதிவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் முதல் பயனை அடைவதில் பெரும் மகிழ்வு கொள்கிறோம்.


வலைசரம் சீனா அய்யாவிற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

     இன்று காலை தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் கு.தங்கராசு அய்யா அவர்கள் அலைபேசியில் அலைத்து சொன்ன விபரமாவது, உங்கள் பார்வைக்கு...

ரூ.5000 நிதியை தாய்த்தமிழ் பள்ளிக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வலைச்சரம் சீனா அய்யா வங்கி காசோலையாக அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் பள்ளியின் சார்பாக தனது நன்றியை வலைப்பதிவர்களுக்கு தெரிவிப்பதாக கூறினார்.

விழாவின் முக்கிய நோக்கமாக தெரிவித்திருப்பதை இவ்விடத்தில் உங்களுக்கு நினைவுருத்துகிறோம்.


இவ்விழாவின் முக்கிய நோக்கம் : 

"  ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க  நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள் என்ற சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்."


       இதில் தொழிற்களம், தமீழ் மீட்சி இயக்கம்  போன்ற இன்னும் பல அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன.


        இவ்விழா மட்டுமல்ல, இனி தொழிற்களம் சார்பாக எவ்வித விழாவை நாம் நடத்துவதாக இருந்தாலும் அவ்விழாவை காரணமாக கொண்டு இணையத்தின் மூலமாக, முகம் தெரியாத பலரையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம். என்பதை மட்டும் நமது சக நண்பர்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.


பதிவர்கள் நாம் நமது பலத்தை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தின் எந்த புள்ளிக்கும் நம்மால் எந்த ஒரு மாற்றத்தையும் உடனடியாக செய்திட முடியும் . 

ஒட்டு மொத்த பதிவர்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக தொழிற்களம் இருக்கும். 

அந்த வகையில், நமது முதல் நிகழ்வை துவங்கியதுமே முதல் ஆளாய் வாழ்த்து தெரிவித்தார் வலைச்சரம் சீனா அய்யா, அவர் தம் அனுபவங்கள் நம்மை இன்னும் சீர்படுத்தும் என்று உணருகிறோம். 

அவரைப்போலவே இன்னும் பல இணைய நண்பர்கள் பெரிய பொக்கிசமாக நமக்கு கிடைத்திருக்கிறார்கள். திண்டுக்கல் தனபாலன், ஜோதிஜி, மெட்ராஸ் பவன் சிவக்குமார், ஆரூர் மூணா, சி.பி.செந்தில்குமார், கவியாலி கண்ணதாசன், பரமேஸ் டிரைவர், வலையகம் அகரன், கோவை நண்பர்கள் சங்கவி, வீடு சுரேஸ்  போன்றோரும் தங்கள் ஆதரவை தெரிவித்து நம்மை மேலும் ஊக்கப்படுத்துகிறார்கள்.

இவ்விழாவில் தாய்த்தமிழ் பள்ளி மாணவர்களை உலகிற்கு கொண்டு செல்ல நம் பதிவர்கள் நம்முடன் துணை நிற்க வேண்டும். 

இவ்விழாவிற்கு பிறகு, உலக தமிழ் பதிவர்கள் மூலமாக கண்டிப்பாக ஒரு மாற்றம் அல்லது உதவி தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு ஏற்படும் என்றும், அவ்வாறே இன்னும் பல பள்ளிகள், திறமைசாலிகளை நாம் உலகிற்கு அடையாளம் காட்ட ஒன்று கூடுவோம் என்றும் நம்புகிறோம். 

- தொழிற்களம் அருணேஸ்
+9 1 95 66 66 12 14

Thursday, December 20, 2012

வாருங்கள் பதிவர்களே! திருப்பூரில் சங்கமிக்கலாம்..

           திவுலகத் தோழர்களுக்கு வணக்கம்.பதிவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய மீண்டும் பதிவர்கள் சந்தித்து மகிழக்கூடிய ஒரு செய்தியோடு உங்களைச் சந்திப்பதில் மனமகிழ்கிறேன்.

         கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் ஒரு பிரம்மாண்ட பதிவர் சந்திப்பை நடத்தி முடிந்திருந்தோம் அல்லவா.அதன் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தது தொழிற்களம் என்பதை நாம் அறிவோம்.

        தொழிற்களம் நிறுவனம் பதிவர்களை சிறப்பான முறையிலே ஊக்குவித்து பலருக்கும் பயன்படும் பதிவுகளை பதிவர்களை எழுத வைத்துக்கொண்டிருப்பதையும் அறிவோம்.  கடந்த காலங்களில் எந்த ஒரு நிறுவனமும் பதிவர்களை இப்படி ஊக்குவித்ததா எனத் தெரியவில்லை என்பதைவிட இல்லையென்று சொல்லலாம்.பதிவர்களுக்காகவே மக்கள் சந்தை.காம் தொழிற்களம் என்றதொரு வலையை உருவாக்கி இருக்கிறார்கள்.அதில் பல பதிவர்கள் பல செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

        அவ்வப்போது பதிவர்களைப் பாராட்டி பரிசளித்து  அவர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு பல விழாக்களை நடத்தி வருகிறார்கள்.அந்த அருமையான செயலுக்கு பதிவர்கள் கட்டாயம் தங்களது பாராட்டுதல்களை தொழிற்களத்திற்கு தெரிக்க வேண்டும்.

       தொழிற்களம் இப்போது 'உறவோடு உறவாடுவோம்' என்ற தலைப்பில் டிசம்பர் 30 ம் நாள் மாபெரும் விழாவை நடத்த உள்ளது அவ்விழாவிற்கு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

    இந்த விழாவில் தமிழ் வலைப்பதிவர்கள் சங்கமமும் நடைபெறுகிறது.பதிவர்கள் ஒன்று கூடும் கருத்தரங்கமும் நடக்கவிருக்கிறது.ஏற்கனவே பதிவுலகத்திற்கு தொழிற்களத்தின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.இருப்பினும் இறுதியழைப்பை பதிர்வர்களுக்கு கொடுக்கவும் தொழிற்களம் விரும்புகிறது.விரைவில் அழைப்பு உங்களுக்கு வந்து சேரும்.

       இவ்விழாவில் கலந்துகொள்ளும் பதிவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்து கொண்டால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வசதியாயிருக்கும்.வருகையை உறுதி செய்த பதிவர்களுக்கு முன்னதாக இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும்.எனவே  டிச 30 விழாவில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துகொள்ளுங்கள்.இதுவரை 30 பதிவர்கள் வருகையை உறுதி படுத்தியுள்ளனர்.திங்கட் கிழமை தங்கள் வருகையை உறுதி செய்த பதிவர்களின் பட்டியல் வெளியிடப்படும்..

நன்றி!

அன்புடன் மதுமதி

வரவேற்புக்குழு:

சீனு
கண்மணி
என் ராஜபாட்டை ராஜா
செழியன்

கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் மக்கள் சந்தை.காம் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்கள் உரையாடிய காணொளி


கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் மக்கள் சந்தை.காம் நிர்வாக இயக்குனர் தோழர் அருண் அவர்கள் உரையாடிய காணொளி





.
உறவோடு உறவாடுவோம் விழா குறித்த மேலான தகவல்களைக் காண இங்கே செல்லுங்கள்.