இதில் கலந்து கொள்ள, நீங்கள் பெரிய எழுத்தாளராக, தொழிலதிபராக, சமூக சேவகராக, பணம் படைத்தவராக, இப்படி எதுவும் தேவை இல்லை.
தமிழ் புரியுமா? தமிழ் தெரியுமா? தமிழரா? அது போதும்!
சமூக மாற்றம் ஒன்று கொண்டு வர விரும்புகிறீர்களா? உறுதியாக நீங்கள் கலந்து கொள்ள வேண்டிய விழா இது!
" ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள் என்ற சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்."
இது தான் இந்த விழாவின் முக்கிய நோக்கமாக இருக்கிறது!
இதில் தொழிற்களம், தமீழ் மீட்சி இயக்கம் போன்ற இன்னும் பல அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன.
நிகழ்ச்சி அமைப்பு :
நாள் : டிசம்பர் 30, 2012 ஞாயிற்று கிழமை
நேரம் : மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை
இடம் : திருப்பூர் குமார் நகர்,
ஶ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபம்,
நிகழ்ச்சி அமைப்பு :
நாள் : டிசம்பர் 30, 2012 ஞாயிற்று கிழமை
நேரம் : மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை
இடம் : திருப்பூர் குமார் நகர்,
ஶ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபம்,
திருப்பூர்.
இந்த விழாவில் "தாய்த் தமிழ்" பள்ளி மாணவர்களுக்கு முக்கியமாக பங்களிக்க வாய்ப்புக் கொடுத்து, அவர்களுக்கு பரிசும் வழங்க இருக்கிறோம்.
அதென்ன? தாய்த் தமிழ்ப் பள்ளி? இந்தப் பள்ளிக்கு என்ன சிறப்பு என்கிறீர்களா?
இதோ, "இங்கே" நீங்கள் தாய்த் தமிழ்ப் பள்ளியைப் பற்றி நீங்கள் படிக்கலாம்.
இந்த விழாவில்,
திரு. உ.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள்
மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியாளர்
தன் கரங்களால் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவ செல்வங்களை பாராட்டி சிறப்புரையாற்றுகிறார்.
நீங்களும் எங்களோடு இணையுங்கள்! மேலும் விபரங்களுக்கு, இந்த வலைப்பூவில் இருக்கும், விழாநோக்கம் குறித்த பக்கத்தைப் பாருங்கள், மேலும், இங்கே அழைப்பிதழ் (மேலே இருக்கிறது), அதில் இருக்கும் அலைபேசி எண்களை அழையுங்கள்!
சரி, உங்களை திருப்பூரில் முப்பதாம் தேதி சந்திக்கிறேன்!
=======================================================================
உங்கள்,
No comments:
Post a Comment
உங்கள் ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவியுங்கள் நண்பர்களே!!
உங்களின் ஒவ்வொரு உற்சாகமும் தான் நம்மை மேலும் வேகமாக உந்திச்செல்லும் சக்தியாக இருக்கிறது...